Sunday 28 September 2008

புதுச்சேரியில் உலக சுற்றுலா தின விழா

புதுச்சேரியில் உலக சுற்றுலா தினவிழா கடற்கரை காந்தி திடலில் நடந்தது. விழாவில் புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம், சுற்றுலா அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எஸ்.பி.சிவக்குமார் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வாசகப்போட்டியில் ஷர்மிளா பானு, பத்திரிகையாளர் பி.என்.எஸ்.பாண்டியன், முருகன் ஆகியோர் முறையே முதல் 3 பரிசுகளை பெற்றனர். புகைப்படப் போட்டியில் நெய்வேலி ஜான் பாஸ்கோ, ஷோகம் ஷோனே, பாஸ்கரராசு ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். புதுவை இளவேனிலுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பத்திரிகையாளர் பி.என்.எஸ்.பாண்டியன், குமரகிருஷ்ணன், முருகன் ஆகியோருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. பரிசு மற்றும் சான்றிதழ்களை முதல்வர் வைத்தியலிங்கம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

No comments: