Wednesday 9 April 2008

கர்நாடகாவில் தமிழ் பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழ் பத்திரிக்கை அலுவலகங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று மதியம் 1 மணிக்கு நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டு கர்நாடக வன்முறை கும்பலுக்கு எதிராக கோஷமிட்டனர்.