Friday 31 December 2010

ஆட்டம் தொடங்கியாச்சி!







புதுச்சேரியில் காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ரங்கசாமி தனிக்கட்சித் தொடங்குகிறார். அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்.
புதுவை மாநிலத்தில் 7 ஆண்டுகள் முதல்வராக இருந்து பெருந்தலைவர் காமராஜரின் அடிச்சுவற்றை பின்பற்றி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய ரங்கசாமி அமைச்சரவை சகாக்களின் ஒத்துழைப்பு இல்லாத நிலையில் கடந்த 2008ம் ஆண்டு தனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதை தொடர்ந்து புதிய முதல்வராக வைத்திலிங்கம் பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர் ரங்கசாமி கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் ரங்கசாமி தனி கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். மேலும் அவர்கள் தனியாக கூட்டம் நடத்தி ரங்கசாமி தனி கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றி அதனை அவரிடம் வழங்கினர். இந்த நிலையில் தை பிறந்த உடன் ரங்கசாமி தனி கட்சி பற்றி முடிவை அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். அதே சமயம் காங்கிரஸ் கட்சியும் ரங்கசாமி கட்சியை விட்டு வெளியேறி விடக்கூடாது என்று தீவிரமாக முயற்சி எடுத்து வந்தது. ஆனால் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை சட்டசபைக்கு வந்த ரங்கசாமி, சட்டசபை செயலாளர் சிவப்பிரகாசம் அறைக்கு சென்று அவரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தை கொடுத்தார். இதனை சட்டசபை செயலாளர் சிவபிரகாசம் உறுதி செய்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் தனது அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து கட்சித்தலைவருக்கு கடிதத்தை கொடுத்தனுப்பினார். அவரைத் தொடர்ந்து அரசு கொறடா அங்காளன் எம்.எல்.ஏ., வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா செய்த பின்னர் ரங்கசாமி, சித்தானந்தா கோயிலுக்குச் சென்றார். அங்கு அ.தி.மு.க., மாநிலச் செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., அம்மா பேரவை செயலாளர் ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., ஆகியோர் அவரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து கூறினர். மதசார்பற்ற அணியில் சேருமாறு கோரிக்கை விடுத்தனர்.
ரங்கசாமி விலகல் குறித்து அ.தி.மு.க., மாநிலச்செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ரங்கசாமி காங்கிரசில் இருந்து விலகியதை வரவேற்கிறேன். ஊழல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி து£க்கி எறியப்பட வேண்டுமானால் ரங்கசாமி எங்களோடு இணையவேண்டும். எங்கள் அம்மாவின் அனுமதியோடு ரங்கசாமியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைய நாங்கள் பாடுபடுவோம். தமிழகத்தில் ஊழல் தி.மு.க., ஆட்சிக்கு மாற்றாக எங்கள் அம்மாவின் ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. அதுபோல் புதுச்சேரியிலும் அ.தி.மு.க., அமைக்கும் கூட்டணி தான் வெற்றிக்கூட்டணி என்பது உறுதியாகி விட்டது.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
இதனிடையே புதுச்சேரியில் ரங்கசாமி புதிய கட்சி தொடங்குவதை பதிவு செய்ய ஓய்வுபெற்ற அரசு ஊழியர் குழு ஒன்று டெல்லியில் முகாமிட்டுள்ளது. புதுச்சேரி காமராஜ் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி பதிவு செய்யப்படுமென கூறப்படுகிறது. வரும் 7 ந்தேதி முறைப்படி கட்சி தொடங்கப்படும். பின்னர் மக்களை நோக்கி பாதயாத்திரை செல்ல ரங்கசாமி முடிவெடுத்துள்ளார். தேர்தலில் ரங்கசாமி கட்சி அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகி விட்டது. கட்சி தொடங்கிய உடன் சென்னை செல்லும் ரங்கசாமி அங்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கிறார். ம.தி.மு.க, தே.மு.தி.க.., கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்தித்து தேர்தல் வியூகம் அமைக்க உள்ளார்.

Tuesday 6 April 2010

ரவிக்குமாரின் அவிழும் சொற்கள்

முடியாது

மனித உள்ளத்தை

யாரும் சரிவரப்

புரிந்து கொள்ள முடியாது.

ஆனால்

நான் பிறந்த ஊரில்

மலர்கள் முன் போலவே

மலர்ந்து

மணம் வீசுகின்றன.

ஜப்பானிய யதார்த்த கவிஞர் ஸீராயுகி அற்புதமாக மனித வாழ்விற்கும் இயற்கைக்குமான நிலையை தனது கவிதை மூலம் பதிவு செய்திருப்பார். மூலாதாரத்தை விட்டு நீண்ட து£ரம் விலகிச் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் மீண்டும் மூலாதாரத்தை நோக்கி திரும்புவார்கள். இது தான் இயற்கையின் நியதி. அதைப்போலவே ரவிக்குமார் தன்னுடைய மூலாதாரத்தை நோக்கி புறவழிப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். இதன் வெளிப்பாடு தான் ‘அவிழும் சொற்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு.

மனித ஜாதியின் வாழ்க்கை தனக்குத் தானே வகுத்துக் கொண்ட கட்டுத் திட்டங்களை மீறி அணையுடைத்த வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. அது தொடர்ந்து ஓடப் பார்க்கிறது. மனிதன் தமக்குள் ஏற்படுத்தி வைத்துக் கொண்ட கட்டுப்பாடுகள், மரபுகள், எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தகரத் தொடங்கியிருக்கின்றன. தன் சரித்திரத்தில் அனுவித்தறியாத சுதந்திரத்தை சுவாசிக்கத் தொடங்கியுள்ளது மனித மனம். தன்னுடைய செயலாலும், அறிவுச் செயல்பாட்டாலும் மனிதன் வரைமுறையில்லா சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளான். இதன் வீச்சு தான் கவிதை வாயிலான சொல்லாடல்கள்.

சிறந்த எழுத்தாளராக, கட்டுரையாளராக, பத்தி எழுத்தாளராக, விமர்சகராக, மக்கள் பிரதிநிதியாக, களப் போராளியாக அறியப்பட்டு இருப்பவர் ரவிக்குமார். இவர் தன்னுள் அளப்பறிய மனிதாபிமானத்தையும், மனிதநேயத்தையும் கொண்ட கவிஞராக அவிழும் சொற்களில் நிலை கொள்கிறார். எவன் ஒருவனில் அடுத்தவர்பால் அன்பு காட்ட முடியுமோ, அவனே சிறந்த படைப்பாளியாக இருக்க முடியும். இயற்கை பற்றிய அக்கறை மட்டுமல்ல, இயற்கையோடு ஒன்றிடும் ரவிக்குமாரின் வாழ்வு தான் இந்த அவிழும் சொற்கள்.

கலைக்கு அடிப்படை அழகுணர்ச்சி. ரவிக்குமாரின் கவிதைகளில் உள்ள அழகுணர்ச்சி வியக்க வைக்கிறது.

யாப்புடைத்த கவிதை

அணையுடைத்த காவிரி

முகிலுடைத்த மாமழை

முரட்டுத் தோலுரித்த பலாச்சுளை.

இது புதுக்கவிதைகள் கூறித்த கூறு. ஆம். ரவிக்குமாரின் கவிதைகளிலும் இயற்கைத் தேன் சுவைக்கிறது.

உலகத்தின் மிகச் சிறந்த இலக்கியம் நெடுநல்வாடை. மதுரை கணக்காயன் மகன் நக்கீரனாரின் புலமையை அளவிட முடியாது. தலைசிறந்த கற்பனை நெடுநல்வாடையில் புதைந்துள்ளது.

மெய்க்கொள் பெரும்பனி

நலியப் பலருடன்

கைக்கோள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க

மாமேயல் மறப்ப மந்தி கூரப்

பறவை படிவன வீழக் கறவை

கன்று கோளழியக் கடிய வீசிக்

குன்று குளிப்பன்ன கூதிர்ப்பானாள்.

- குளிர் காலம் குறித்த நக்கீரனாரின் வர்ணனை இது. உடம்பைக் கொள்ளும் பெரும் பனிக் காலத்தில் மாந்தர் புடைநடுங்க, கால்நடைகள் மேய்ச்சலை மறந்த நிலையில், கடும் குளிர் காரணமாக பறவைகள், குரங்கினங்கள் மரங்களில் இருந்து சுருண்டு விழ, பால்குடிக்க வந்த கன்றை தாய்ப்பசு எட்டி உதைக்கும் நிலையில் வாட்டியதாம் குளிர். என்ன ஒரு அழகுணர்ச்சி!.


நனைந்திருக்கிறது சாலை

நனைந்திருக்கின்றன மரங்கள்

நனைந்து நடுக்கத்தை உதறி

உதிர்ந்தபடி நடக்கின்றன

கால்நடைகள்.

நனைந்திருக்கிறது நெஞ்சு

நடவு செய்யக் காத்திருக்கும்

நல்ல நிலம் போல.

- இது ரவிக்குமாரின் அழகுணர்ச்சி. நக்கீரனாரின் சுவடு இதில் தெரிகிறது.

இளம் பருவக் காலத்தை நினைத்துப் பார்ப்பது என்பது தெய்வீக ராகம், திகட்டாத தேன், குறையாத வாசம், மாறாத நேசம். வசந்த கால நினைவலைகளை தனது கவிதைகளில் நினைவுகூர்கிறார் ரவிக்குமார்.

பால்ய காலப் பதிவுகள்

களங்கம் இல்லாதவை

அவற்றைச் சொல்லும் போது நீ

சிறுமி ஆகிவிடுவது பிடிக்கிறது......

......வயல்களின் நடுவே

அல்லிக் கொடிகள் அடர்ந்த குளத்தில்

உனக்கு பூ பறித்துத் தருகிறேன்

வா.

இப்படித் தான் தனது மூலாதாரத்தை நோக்கி பயணிக்கிறார் ரவிக்குமார்.





வரப்பு மேட்டில்

தப்பி முளைத்த எள் செடியின்

பூவில் ஒளிந்திருப்பாய்

புங்கை மரத்து காகத்தின்

ஒற்றைக் குரலில் எதிரொலிக்கும் என் தவம்.

காதலிக்காக காத்திருக்கும் காதலனின் நிலையை வெளிப்படுத்தும் வரிகளும் அவிழும் சொற்களாக.
இயற்கை, காதல் இவற்றை பெரும்பாலும் அவிழும் சொற்களில் உதிர்ந்த இவர், மனித நேயத்தையும் வெளிப்படுத்துகிறார்.

கைசொடுக்கில் களிமண்

கடவுளாகிறது.

கன்ஸ்யூமர் பக்தனாகிறான்

படைத்தவனே அதன்

மகத்துவம் புரியாமல் மண்

பிசைந்த கையோடு

சில்லறைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

இங்கே மார்க்சிய சிந்தனையாளராக ஆட்கொள்கிறார் கவிஞர். புதுக்கவிதைகளில் புதிய பரிமாணத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது ‘அவிழும் சொற்கள்’.

-அகவிழி பாண்டியன்

புதுச்சேரி அரசியல் சூடு பிடிக்கிறது


புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சித் தொடங்க ஆயத்தமாகி வருகிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் முயன்று வருகின்றனர். இதனால் புதுச்சேரி அரசியல் சூடு பிடித்துள்ளது.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி சமீபகாலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். கோயிலுக்குச் செல்வது, டென்னிஸ் விளையாடுவது என்று இருந்தார். ஆனாலும், பொதுமக்களின் வீட்டு விசேஷங்களுக்கு தவறாமல் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ரங்கசாமி, தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வந்து வாழ்த்துவதை பெரும்பாக்கியமாக கருதி பலர் அவருக்கு அழைப்பிதழ் வைத்தவண்ணம் உள்ளனர். இதனால் நாளன்றுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் ரங்கசாமி கலந்து கொள்கிறார்.
சமீபத்தில் காலாப்பட்டு என்ற பகுதியில் நடந்த தேரோட்டத்தில் கலந்து கொண்ட ரங்கசாமிக்கு அப்பகுதி மக்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அவரது கையால் பிரசாதம் வாங்க பெரும் போட்டி எழுந்தது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் முதல்வர் ரங்கசாமி வாழ்க என்ற கோஷம் எழுகிறது. ரங்கசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. மக்கள் சேவகர்கள் பலர் தங்களது பிறந்தநாளுக்கும், விளையாட்டு போட்டிகளுக்கும் ரங்கசாமியை தலைமை தாங்க அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தனிக்கட்சித் துவங்குவது பற்றி ரங்கசாமி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தொகுதிவாரியாக முக்கிய புள்ளிகளை சந்தித்து பேசுகிறார். அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ரங்கசாமி தனிக்கட்சித் தொடங்கினால் கூட்டணி வைக்க காத்திருக்கின்றன. ரங்கசாமி தனிக்கட்சித் தொடங்கினால் காங்கிரஸ்- தி.மு.க., கூட்டணி கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும். அரசு ஊழியர், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மத்தியில் ரங்கசாமி அலை அடிக்கிறது. அவரது ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட இலவச திட்டங்கள் குறித்தே எங்கும் பேச்சாக உள்ளது. இது ஆளுங்கட்சியினர் வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தற்போது இரண்டு கோஷ்டிகள் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றன. மத்திய அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான கோஷ்டியில் முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் உள்ளனர். ராஜ்யசபா எம்.பி., ப.கண்ணன் கோஷ்டியில் அமைச்சர்கள் கந்தசாமி, நமச்சிவாயம் ஆகியோர் உள்ளனர். உள்துறை அமைச்சர் வல்சராஜ் நடுநிலை வகிக்கிறார். அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் யார் கை உயர்கிறதோ அங்கு சென்று சேர்ந்து விடலாம் என்று காத்திருக்கிறார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி பல இடங்களில் முதல்வர் வைத்திலிங்கத்தின் செயல்பாடுகளை குறை கூறி வருகிறார். நான் நினைத்ததால் தான் வைத்திலிங்கம் முதல்வர் ஆனார் என்று கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய முதல்வர் கூட்டுறவுத்துறை செயல்படவில்லை என்று பொதுமேடையிலேயே கூறினார். இதனால் இருவருக்குமான மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது.
இதைப்போல தொகுதி மறுசீரமைப்பில் தனது சொந்த தொகுதியான நெட்டப்பாக்கத்தை இழந்த முதல்வர் வைத்திலிங்கம் நகரப்பகுதியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட நினைத்து பல்வேறு திட்டங்களை அந்த தொகுதிக்கு ஒதுக்கி வருகிறார். இருப்பினும் காமராஜ் நகர் தொகுதியில் உள்ள கவிக்குயில் நகர், வெங்கடேஸ்வரா நகர், பாலாஜிநகர், சாமிப்பிள்ளைத் தோட்டம், வசந்தம் நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதிகளில் ரங்கசாமி ஆதரவாளர்கள் அதிகம். குறிப்பாக பெண்கள் மத்தியில் ரங்கசாமியின் செல்வாக்கு கொடிகட்டி பறக்கிறது. எனவே, ரங்கசாமியின் ஆதரவு இருந்தால் மட்டுமே வைத்திலிங்கம் வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது. கந்தசாமியை சமாளிக்கவும், காமராஜ் நகர் தொகுதியில் வெற்றிபெறவும் ரங்கசாமியின் ஆதரவு வைத்திலிங்கத்திற்கு தேவையாக உள்ளது. தற்போதைய அரசின் மீது மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. எதிர்கட்சி கேட்காத கேள்விகளை எல்லாம் அவர்கள் சார்பாகவும், பொதுமக்களின் சார்பாகவும் ப.கண்ணன் எம்.பி., கேட்கிறார்.
இது போன்ற நிலையில், சட்டசபைத் தேர்தலில் தோல்வியை தவிர்க்க, ரங்கசாமியை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவே காங்கிரசார் விரும்புகின்றனர். அப்படியானால் வைத்திலிங்கம் இரண்டாவது அமைச்சர் பதவியை ஏற்க தயாராக உள்ளார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தற்போது நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. வரும் 27ந் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றால் அவரது பதவி பறிபோகும். எந்த அணியையும் சேராத சபாநாயகர் ஆர்.ராதாகிருஷ்ணன், ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். 'ம்... பார்க்கலாம்' என்று கூறிய முதல்வர் ரங்கசாமி, 'பதவி தானே போகும். போகட்டுமே' என்று தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறார்.
இது இப்படி இருக்க மாநில அரசியலில் தனக்கு எதிராக கோஷ்டி வளருவதை மத்திய அமைச்சர் நாராயணசாமி விரும்பவில்லை. எனவே, ரங்கசாமியை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அரசியல் சாணக்கியரான நாராயணசாமி, 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டார். வரும் 10ந் தேதி புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்கும் விழா நடக்கிறது. இந்த விழாவில் ரங்கசாமி பங்கேற்க வேண்டும் என்று நாராயணசாமி விரும்புகிறார். தனது ஆதரவாளர்களை விட்டு ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இதனால் புதுச்சேரி அரசியல் களைகட்டத் தொடங்கியுள்ளது.

Monday 8 February 2010

காற்றின் சூத்திரம் அறியும் பருந்து

மரநிழலில் ஒதுங்கி அசை போடும்

பசுமாட்டின் வாலில் தொங்கி

மலப்புழையின் வாயிலைக் கொத்தி

சுகம் கொள்ளும் காக்கைகள்.



போதை தலைக்கேறிய குடிகாரனின் வாந்தி

விழுங்க போட்டி போடும் நாய்களின் கூட்டம்

சாராயக்கடை வாசலில் உறுமலுடன்...

எதிரும் புதிருமாக.


இருப்பை வெளிக்காட்ட அலறிக் கொட்டமடிக்கும்

ஆந்தைகளும்-கோட்டான்களும்.

பாத்திரத்தில் தலைநுழைத்து நக்கித் தின்று

பகல் து£க்கத்தில் உறையும் திருட்டு பூனைகள்.


இவைகளுக்குத் தெரியாது


காற்றின் சூத்திரம் கற்றுணர்ந்து

ஆகாய வெளியில் வட்டமிடும் பருந்து

காக்கைகளின் இறக்கைகள் கொண்டு

ஒருபோதும் பறப்பதில்லை.


கழிவிறக்கத்தின் மிச்சத்தை விழுங்கும்

பன்றிகளின் உணவில்

சிங்கம் பங்கு கேட்பதில்லை.
-அகவிழி பாண்டியன்

Monday 1 February 2010

ஒரு அறிவுஜீவியும், ஒரு செல்போனும்

தோள்பட்டையில் தொடங்கி, முழங்காலுக்கு சிறிது மேலாக தொள தொளவென ஒரு சட்டை போட்ட மெலிந்த தேகமுடைய ஒருவர். எட்டி நின்று பார்ப்பவருக்கு அவர் ஒரு அப்பிராணி என்று தோன்றும். அருகில் சென்றால் அவரைச் சுற்றி பரவிக்கிடக்கும் சார்மினார் சிக்ரெட்டின் வாசம் கூட ஏதோ நம்மிடம் பேச வருவது போல் இருக்கும். இவர் தான் எம்.கே.

எம்.கேசவராஜ் என்ற தனது பெயரை இப்படி மாற்றிக் கொண்டதாக கூறுகிறார்கள். பாண்டிச்சேரியில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர். வாய்க்கு வக்கணையாக சாப்பிட்டு வளர்ந்தவர். இளமையில் உயர்தர ஆங்கில கல்வி பயின்றதால் இவரிடம் உள்ள ஆங்கில புலமைக்கு எல்லையே இல்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் சொத்து பிரச்னை காரணமாக வசதி வாய்ப்புகளை இழந்தவர். வாழ்க்கையை ஓட்ட பல கட்டங்களில் தனது பன்முகத் திறமைகளை(!) வெளிப்படுத்த தயாராகி இருந்தார். நண்பர் ரத்தினத்தின் கவிதைகளை படித்த, எம்.கே., 'கவிதை சூப்பர்...' என்று கூற ரத்தினத்திற்கும், இவருக்குமான நட்பு தொடங்கியிருக்கிறது. 'ஓ... ஐ சீ...!' என்று கூறி ஆந்த்ரோ பாலஜி, பெமினிசம், மார்டன் எக்கனாமிக்ஸ் என்று பேசிய எம்.கே வின் ஆங்கில அறிவைக் கண்டு புல்லரிக்காதவர்களே இருக்க முடியாது. இப்போதெல்லாம் எம்.கே-வின் கார்டியன் ரத்தினமும் அவரது ஸ்டுடியோவும் தான். போட்டோ ஆல்பங்களில் இடம் பெற வேண்டிய ஆங்கில வாசகங்களை அழகாகச் சொல்வார் எம்.கே. அதற்கு பரிகாரமாக கைச் செலவுக்கு எதாவது வாங்கிச் செல்வார்.

ரோமண்ட் ரோலண்டு நு£லகத்திற்குச் செல்வது, புதிய ஆங்கில நு£ல்களை படிப்பது, தமிழில் குறிப்பித்தக்க எழுத்தாளர்களை படிப்பது, பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைகள் நடத்தும் கருத்தரங்கங்களுக்கு போவது, வாசிக்கப்படும் கட்டுரைகளின் நீள அகலங்களை பற்றி விவாதிப்பது என எம்.கே.வின் அறிவுஜீவித்தனம் பரந்துப் பட்டு விரியும்.

தன் கண்ணால் பார்க்கப்படும் பல்கலைக்கழக மாணவர்கள்,. நண்பர்கள், இலக்கிய கூட்டங்களில் சந்திக்கும் நபர்களிடம், சமூக அவலங்களைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்வார். அப்படி இவரிடம் வகையாக மாட்டுபவர்களிடம் இவர் கேட்கும் முதல் கேள்வி, 'இப்போ நீங்க யார படிச்சிக்கிட்டு இருக்கீங்க?', 'புருக் இன் த பரூக் படிச்சி இருக்கீங்களா?', 'பட்ஸ் ஆப் த லோட்டஸ் படிச்சீங்களா?' , 'யோங் சூ வாங் எழுதிய ஜப்பானிய கவிதை தொகுப்பு உங்ககிட்ட இருக்கா?', 'நவீன இலக்கியவாதிகள்ள உங்களுக்கு பிடிச்சது யாரு..?'

இப்படியாக இருந்த எம்.கே-வை பார்த்து அதிசயத்த வக்கீல் ஒருவர் தன் வழக்குத் தொடர்பான ஆவணங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க உதவி கேட்டு நாடினார்.

''அப்கோர்ஸ்... இதென்ன பிரமாதம் நான் பார்த்துக்குறேன். பட்... ஒவ்வொரு டிரான்ஸ்லேஷனுக்கும் ஐநு£று ரூபாய் கொடுக்கணும். சரியா?''

''சரி நான் தர்றேன். உங்கள எப்படி தொடர்பு கொள்றது?''

''நீங்க ரத்தினம் கடைக்கு போன் செய்யுங்க அவர் எங்கிட்ட சொல்வார். அதர்வைஸ் ஐ வில் கம் டூ யுவர் ஆபீஸ்.''

''இல்லை. உங்களுக்கு சிரமம் வேண்டா''.

''இல்லாட்டி எனக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுங்க. நீங்க தொடர்பு கொண்டா நான் ஆபிசுக்கு வர்றேன்.''

''ஓ.கே. வாங்கித் தர்றேன்.''

ஒரு சில நாட்கள் கழித்து எம்.கே., வின் கையில் செல்போன். சிம்கார்டுடன் உபயம் செய்திருந்தார் அந்த அப்பாவி வக்கீல்.

''அலோ... யாரு நான் எம்.கே., பேசுறேன். அல்லயன்ஸ் பிரான்சிஸ்லே ஒரு டாக்குமெண்டரி ஷோ நடக்குது. நான் அங்க தான் இருக்கேன்...''. ''அலோ£££.... கருத்தரங்கத்துலே என்னய்யா கட்டுரை வாசிச்சான்?''. ''சீ தட் பெல்லோ டெல்லிங்.....'' ''அலோ.. நான் ரோமண்ட் ரோலண்டு வெளியிலே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.'' ''ஓ.. ஐ சி... பைவ் மினிட்ஸ் கழிச்சி போன் பண்றேன்.''

நண்பர் ரத்தினம் உட்பட பலருக்கு மிஸ்டு கால் கொடுப்பார். யாரும் கிடைக்காத நேரத்தில் செல்போனை நோண்டுவது எம்.கே., வின் இயல்பாகி விட்டிருந்தது.

எம்.கே வாழ்க்கையில் செல்போன் பிண்ணிப்பிணைந்து உறவாடியது. யார் போன் செய்தாலும் எடுத்து பேசும் அவர், வக்கீல் போன் செய்தால் மட்டும் எடுத்து பேச மாட்டார். நாளைக்கு நேராக போலாமே என்று நினைப்பார். ஆனால் போக மாட்டார். பாவம் வக்கீல்.

மாதங்கள் கழிந்தது. மணிமாறன் டீக்கடையில், டீ சாப்பிட்டுக் கொண்டே, யாருடனோ செல்போனில் ஆங்கிலத்தில் உரக்க பேசிக் கொண்டிருந்த எம்.கே-வை உற்று பார்த்தது ஐந்தாறு பேர் கொண்ட ஒரு கும்பல். செல்போன் பேசி முடித்து சிகரெட்டை பற்ற வைத்தார். கையில் ஒரு மஞ்சள் பையுடன் இருந்த ஒருவர் எம்.கே-வின் அருகில் நெருங்கினார்.

''சார்.. உங்களுக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியுமா?''

''ஓ.. எஸ்! ஷேக்ஸ்பியர் படிப்பேன். வோல்ஸ்வொர்த் படிப்பேன்.''

''அதெல்லாம் படிக்க வேணாம் சார். இத படியுங்க.''- மஞ்சள் பையில் கையை விட்டு, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு வீட்டு பத்திர நகலை காண்பித்தார். வாங்கிப் படித்த எம்.கே, அந்த பத்திரத்தில் இருந்த வாசகங்களை தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார். அந்த ஐந்தாறு பேரின் முகத்திலும் சந்தோஷம்.

''சார்... நீங்க என்ன பண்றீங்க?''

''ஐ.. எம். ஏ டியூட்டர். மாணவர்களுக்கு கிளாஸ் எடுப்பேன். புத்தகம் படிப்பேன்.''

''சார்... உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா... எங்களோட வாங்க...''

''நீங்க என்ன பண்றீங்க?''

''நாங்க எல்லாம். மீடியேட்டருங்க. இந்த ஏரியாவுல வீடு, மனை, அப்பார்ட்மெண்ட், கடைங்க வாங்கறது, விக்கறது எங்களுக்கு தெரியாம நடக்காது.''

''ஓ.. ஐ சீ... நான் என்ன பண்ணணும்?''

''இந்த ஏரியாவுல எல்லாம் படிச்சவங்க.. வியாபாரம் பேசறப்போ.. இங்கிலீசுல பேசனா படியும். தவிர பத்திரங்க இங்கிலீஸ்ல எழுதி இருக்கும். அதான் நீங்க எங்க கூட வந்தீங்கன்னா சேந்து பண்ணலாம். கமிஷன பிரிச்சிக்கலாம்.''

''ம்... ஓ.கே. உங்க நம்பர கொடுங்க.. அப்புறம் ஒரு பாக்கெட் சார்மினார் வாங்குங்க''

எல்லோர் நம்பரையும் செல்போனில் பதிவு செய்து கொண்டார் எம்.கே. சார்மினார் சிகரெட்டையும் கையில் வாங்கிக் கொண்டார்.

''தென். உங்க எல்லாருக்கும் ஆபிஸ் எதாவது இருக்கா...?''

''ம்.. இருக்கு சார். சீட்டுக்கட்டு கிளப் நடத்துறாரே ஜேக்கப்பு. அந்த கிளப்புக்கு கீழே தான் அவரு ஆபீசு. அங்க தான் நாங்க இருப்போம். அவரும் எங்களுக்கு வியாபாரம் தருவாரு. பார்ட்டிகள அந்த ஆபிசுல தான் சிட்டிங் உட்கார வைச்சி பேசுவோம். அவரு பேசுனா சில பார்ட்டிங்க படியும். நீங்க நாளைக்கு அங்க வாங்க.''

இந்த அறிமுகத்துக்கு பிறகு, எம்.கே., ரொம்ப பிசியாகி விட்டார். காலையில் வீட்டை விட்டு ஆபிசுக்கு போவார். பேப்பர் படிப்பார். பிசினஸ் லைனை படித்து விட்டு ரியல் எஸ்டேட் மார்க்கெட் நிலவரம் குறித்து சொல்வார். யாருடைய உபயத்திலோ சிகரெட். மணிமாறன் டீக்கடைக்கு வருவார். கிடைக்கும் வண்டிகளில் எல்லாம் தொற்றிக் கொள்வார்.

மெசேஜ் கொடுப்பது, மிஸ்டு கால் கொடுப்பது, இருக்கும் இடத்தைச் சொல்லி ஆட்களை வரச் சொல்வது என செல்போன் இல்லாமல் தன்னால் இயங்க முடியாது என்ற நிலைக்கே வந்து விட்டார் எம்.கே. இப்போது யாரை பார்த்தாலும் அது படிச்சீங்களா? இது படிச்சீங்களா? என்றெல்லாம் கேட்பதில்லை.

''ரெட்டியார்பாளையத்தில் முப்பதுக்கு அறுபது பிளாட் ஒண்ணு இருக்கு. மோகன் நகர்ல செக்கண்ட் புளோர்ல அப்பார்ட்மெண்ட் இருக்கு. முப்பத்தஞ்சு எல் சொல்றாங்க... பாத்து பேசிக்கலாம். என் செல்லுக்கு போன் பண்ணுங்க... நல்லபடியா முடிச்சித் தர்றேன். சார்.. வடக்கு பார்த்த பிளாட்டு. இந்த ஏரியாவுல இவ்வளவு கொறஞ்ச விலையில கெடைக்கிறது கஷ்டம்.. நீங்க இன்வெஸ்ட் பண்ணுங்க சார்.. அலோ.... அலோ... ச்சா லைன் கட் ஆயிடுச்சிப்பா''

எவ்வளவு தான் கீழே விழுந்து புரண்டாலும் ஒட்டரது தானே ஒட்டும். அது மாதிரி தான் எம்.கே-வுக்கும். எவ்வளவு தான் பேசினாலும் எந்த பார்ட்டியும் படியவில்லை. ஏதோ தினம், தினம் சிகரெட், கைச் செலவுக்கு சில ரூபாய்கள் யாரோ கொடுத்து விட்டு போவார்கள்.

இப்படித் தான் ஒரு நாள் அந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டில் இருந்து புறப்பட்டவர் நேராக ஜேக்கப்பின் ஆபிசுக்கு வந்தார். யாரும் இல்லை. சகாக்களின் செல்போன்களை தொடர்பு கொண்டு யாருடைய எண்களும் கிடைக்காததால், ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். திறந்து கிடந்த ஆபிசில் உட்கார்ந்து பேப்பர் படிக்கத் தொடங்கினார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாடியில் உள்ள கிளப்பில் ஆட்டம் களைகட்டியிருந்தது. வெள்ளைச்சட்டை வேட்டி சகிதமாக பெரிய மனிதர்கள் வந்துக் கொண்டும், போய்க் கொண்டும் இருந்தார்கள். கிளப்பில் வேலை பார்க்கும் பொடியன் பீர் பாட்டிகளை கைகளில் வைத்துக் கொண்டு, சிகரெட், சிப்ஸ் பாக்கெட்டுகளை அடுக்கிக் கொண்டு படிகளை கடந்து வருவதும், போவதுமாக இருந்தான்.

திடீரென ஒரு சத்தம். நிமிர்ந்து பார்த்த எம்.கே.வுக்கு அதிர்ச்சி. எதிரில் பத்து பதினைந்து போலீஸ்காரர்கள். இன்ஸ்பெக்டர் ஒருவர் எம்.கே., வை பார்த்து முறைத்தார். இதுவரை இதுபோன்ற பார்வையை பார்க்காத எம்.கே., சேரை விட்டு எழுந்தார்.

''எங்கடா ஜேக்கப்பு..?''

''அலோ.. மரியாதையா பேசுங்க..''

''...த்தா காசு வச்சு சீட்டு வெளையாட்டு நடத்துறீங்க.. ஒங்களுக்கு என்னடா மரியாத?''

''அலோ.. ஐ எம் ஏ டியூட்டர் கம் மீடியேட்டர். திஸ் ஈஸ் அவர் ஆபிஸ். மைன்ட் யுவர் வேர்ட்....”, எம்.கே., பேசிக் கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து தாள்வாயில் ஒரு அறை விட்டார்.

''என்னடா நாயே து... இங்கிலீசு. தமிழ்ல பேசமாட்டியாடா பொறுக்கி நாயே...''

கண்கள் கலங்கிய நிலையில் சட்டைப்பையில் இருந்து செல்போனை எடுத்தார் எம்.கே. அவரது கையில் இருந்து செல்போனை வெடுக்கென பிடுங்கினார் இன்ஸ்பெக்டர். அதற்குள்ளாக மாடிப்படிகளில் சூதாடியவர்களை கைது செய்துக் கொண்டு வந்தது. ஒவ்வொருவரும் போலீசாரை கெஞ்சினர். சிலர் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல், 'இந்த ஒரு முறை விட்டு விடுங்கள்' என்று கூறி காலில் விழுந்தனர்.

''எல்லாரையும் வண்டியில ஏத்துங்கய்யா.. மொதல்ல இந்த நாய ஏத்துங்க'' என்று கூறி எம்.கே-வின் கழுத்தில் கை வைத்து வண்டிக்குள் தள்ளினார் இன்ஸ்பெக்டர்.

மறுநாள் காலை பத்திரிக்கைகளில் பரபரப்பாக செய்தி வெளியாகி இருந்தது.

சூதாட்ட விடுதியில் போலீஸ் ரெய்டு:
காசு வைத்து சூதாடிய 30 பேர் கைது!
96 ஆயிரம் ரூபாய் - 30 செல்போன்கள் பறிமுதல்!!

ஒரு வழியாக எம்.கே பெயிலில் வெளியே வந்தார். பறிமுதல் செஞ்ச செல்போன் எல்லாம் கேஸ் முடிஞ்ச அப்புறம் தான் தருவாங்களாம். செல்போனுடனே பழைய தொடர்புகள் எல்லாம் துண்டித்து போய் விட்டது. இப்போது எம்.கே.வின் கைகளில் ‘ஹ§மன் ரைட்ஸ் இன் இண்டியா’ என்ற புத்தகத்தையும், சார்மினார் சிகரெட்டையும் மட்டுமே பார்க்க முடிகிறது. அடுத்த செல்போன் வாங்கித் தர எந்த புண்ணியவான் வருவானோ?.

-பி.என்.எஸ்.பாண்டியன்

Tuesday 19 January 2010

பயணித்த கதை

திருப்பூர்ல ஒரு நிகழ்ச்சிக்கு போக வேண்டியிருந்தது. ராத்திரி 10 மணிக்கு வால்வோ பஸ் புக் பண்ணியிருந்தேன். என்னோட சென்னையில் இருந்து முத்துக்குமார்னு ஒரு தம்பி வர்றான். அவன் பாண்டிச்சேரிக்கு வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து அவினாசி போய் அப்புறம் திருப்பூர் செல்ல திட்டமிட்டு இருந்தோம். சுமார் 7 மணிக்கே வீட்டை விட்டு பெட்டியுடன் கிளம்பி விட்டேன். வீட்டு வாசலுக்கு வந்து இளங்கோ அண்ணன் என்னை பஸ் ஸ்டாண்டுக்கு ஏற்றிச் சென்று விட வந்தார். திருச்சியில் இருந்து இங்கு வந்து தங்கி வேலை பார்ப்பவர் இளங்கோ அண்ணன். நண்பர் தான் என்றாலும் வயதில் பெரியவர் என்பதால் அண்ணன் என்று கூப்பிடுவோம். கருகருன்னு சொறிமுத்து அய்யனார் சிலை போல இருப்பார். அதே மீசை. அதே கண்கள்.
சில நேரம் ‘யோவ்...ஏட்டய்யா..’ என்று அவரைச் செல்லமாக கூப்பிடுவோம். எங்க வீட்டில் இருந்து நடந்து செல்லும் து£ரத்திலேயே இளங்கோ அண்ணனின் வீடு இருந்தது. ஒரு நண்பரின் வீட்டு மாடியில் தனிக்குடித்தனம் செய்துக் கொண்டிருந்தார்.

மணி ஒன்பதரை ஆயிடுச்சி. என்னோட செல்போன் அடிச்சது. எடுத்தேன். லைனில் முத்து இருந்தான்.

“ஹலோ..! என்ன முத்து எங்கடா இருக்க?”

“அண்ணே.. நா பஸ் டேண்டுல தான் இருக்கேன். எதிர்த்தாப்பல இருக்குற ஓட்டல் வாசல்ல வெயிட் பண்றேன்.”

“ஓகே முத்து. ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்”- என்றுச் சொல்லி செல்போனை கட் செய்து விட்டு, இளங்கோ அண்ணன் பல்சரில் உட்கார்ந்து கொண்டேன். பெட்டியை தொடையில் வைத்துக் கொண்டேன். ரொம்ப கணமாக இருந்தது. ஆனா வலி தெரியல.
அஞ்சு நிமிஷத்துல பஸ் ஸ்டாண்டுக்கு போயிட்டோம். முத்து ஓடி வந்து கை கொடுத்தான்.
“என்ன முத்து சாப்பிட்டியா?” ன்னு கேட்டேன்.

“இல்லண்ணே...”

“எதாவது பீர் சாப்பிடறியா?”

“...ம். நீங்க கம்பெனி குடுத்தா சாப்பிடறன்”-னு சொன்னான்.
பக்கத்தில் இருந்த ஒயின்சுக்கு சென்றோம். கிங்பிஷர் டின் பீர் ரெண்டு வாங்கினோம். மடக் மடக்கென குடித்து விட்டு டின்களை நசுக்கி போட்டு விட்டு வெளியே வந்தோம். பஸ் புறப்பட 10 நிமிஷம் மட்டுமே இருந்தது. காலத்தின் அவசரம் கருதி சுருக்கமாக முடித்துக் கொண்டோம். எனக்கு து£க்கம் வர்ற மாதிரி இருந்தது. பக்கத்து ஓட்டலுக்குச் சென்று ஆளுக்கு இரண்டு பரோட்டா பார்சல் கட்டிக் கொண்டோம். இளங்கோ அண்ணன் ரெண்டு தண்ணீர் பாட்டில்கள் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து கையசைத்து விட்டு கிளம்பி விட்டார்.
பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தோம். நான் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தேன். எனக்கு பக்கத்தில் முத்து. எங்கள் சீட்டுக்கு முன் கல்லு£ரி மாணவ, மாணவிகளைப் போன்ற தோற்றம் கொண்ட ரெண்டு பையன், ரெண்டு பெண்கள். நால்வருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் பேசுவதில் இருந்தும், அந்த பெண்களை பார்த்ததில் இருந்தும் தெரிய வந்தது. அவர்கள் ஆணும் பெண்ணுமாக மாறி, மாறி ஜோடிகளாக பிரிந்து உட்கார்ந்தார்கள். புதுச்சேரியில் உள்ள நர்சிங் கல்லு£ரியில் படிப்பவர்களாக இருக்கக்கூடும். தங்கள் சொந்த ஊருக்கு விடுமுறைக்காக செல்கின்றனர். கோயம்புத்து£ரில் இருந்து அவர்கள் பாலக்காட்டிற்கோ, திருச்சூருக்கோ செல்ல இந்த பஸ்ஸில் எங்களோடு பயணிக்கிறார்கள் எனத் தெரிந்தது.
பஸ் புறப்பட்டு சில நிமிடங்களில் பரோட்டா பொட்டலங்களை பிரித்து இருவரும் சாப்பிட்டோம். ஜன்னலைத் திறந்து கையை கழுவி, தண்ணீர் குடித்து முடித்தோம். குளிர் அதிகமாக இருந்தது. கைகளை கட்டிக் கொண்டு சீட்டில் சாய்ந்து து£ங்குவதற்கு முயற்சி செய்தேன். முத்து பேச ஆரம்பித்தான்.

“அண்ணே... அங்கிட்டு பாருங்கண்ணே. இப்படி சின்ன பசங்களா இருக்காங்க.. அந்த பொண்ணுங்க.. பசங்க தோள் மேல சாஞ்சி படுத்துகிட்டு வராங்க. பாருங்க..”
“அதுக்கு என்ன இப்போ”
“இல்ல.. காதல்ன்னு ஆரம்பிச்சா உடனே இப்படி நெருங்கி பழக தோணுமாண்ணே..”.

“இதெல்லாம் எங்கிட்ட ஏண்டா கேக்குற?. அந்த பொண்ணுங்களையே பாத்து கேளு”

“ஒரு சந்தேகம் தான்....”

“சும்மா கம்முன்னு படுத்து து£ங்குப்பா..”- என்றுச் சொல்லி கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டேன்.

சுமார் இரண்டு மணிநேரம் கண் அயர்ந்திருப்பேன். திடீரென முழிப்பு வந்தது. கண்ணை விழித்து திரும்பினேன். முத்துவின் கையில் இருந்த செல்போன் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. அவன் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தான்.

“செல்போன்ல என்னடா பண்றே?. இந்த நேரத்துல...”

“மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்ணே..”

“யாருக்கு?”

“பிரண்டுக்கு தான்ணே.”

“பாய் பிரண்டா? கேர்ள் பிரண்டா?”

“கேர்ள் பிரண்டு தான்ணே.” வழிந்துக் கொண்டே சொன்னான். இருட்டில் அவன் முகத்தை பார்த்தேன். பிரகாசமாக இருந்தது.

“என்னடா வேலையெல்லாம் இது?”

“சும்மா தான்ணே...”

“இப்போ மணி என்ன ஆச்சி?”

“பணிரெண்டரை ஆகுதுன்ணே”- முத்து செல்போனை பார்த்து மணியைச் சொன்னான்.

“இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா?”- என்று கேட்டு விட்டு கண்ணை மூடி திரும்பவும் து£ங்க முயற்சி செய்தேன். து£க்கம் வரவில்லை.
தண்ணீர் பாட்டிலைத் திறந்து கொஞ்சம் குடித்தேன். முத்து தொடர்ந்து செல்போனில் இயங்கிக் கொண்டிருந்தான். என்ன தான் செய்கிறான்? என்று அவன் செல்போனை உற்று பார்த்தேன். அப்போது அவனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதை அவன் திறந்து படித்து விட்டு, பதில் செய்தி ஒன்றை டைப் செய்து அனுப்பினான்.
‘ஐயம் இன் பஸ்’-. முத்துவின் விரல்கள் செல்போன் கீ போர்டில் வி¬ளாடியதை அப்போது பார்க்க முடிந்தது. அடுத்த நிமிடமே, அவன் அனுப்பிய செய்திக்கு பதில் வந்தது. ‘யூ ஆர் இன் மை ரூம்’.

“என்ன முத்து இதெல்லாம்?”.

“சும்மாண்ணே”

“எதற்கெடுத்தாலும் சும்மான்னா என்னடா. லவ் பண்றியா?”

“இல்லன்ணே சும்மா தான் பிரண்ஸிப்.”

“இந்த மாதிரி மெசெஜ் அதுவும் இந்த நேரத்துல வருது. கேட்டா சும்மான்னு சொல்லுற?”

“இப்ப தான்னே அந்த பொண்ணுக்கு டைம் கிடைக்கும்”. சிரித்துக் கொண்டே மழுப்பலாக சொன்னான்.

“என்னவோ போடா”- என்றுச் சொல்லிக் கொண்டே காலைத்து£க்கி ஜன்னலின் ஓரத்தில் வைத்து மீண்டும் கண்ணை மூடினேன். து£க்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டிருந்தேன். அப்போது, மயிலிறகால் யாரோ காலை வருடுவது போல் உணர்வு எழுந்தது. எனக்குள் ஏதோ நிகழ்ந்தது. கண்ணை விழித்து பார்த்தேன். அப்போது எதிர் சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணின் கூந்தல் என் கால்களை வருடிக் கொண்டிருந்தது தெரிந்தது. விருட்டென கால்களை எடுத்து விட்டு முத்துவை பார்த்தேன். அவன் செல்போனும் கையுமாக இருந்தான்.

“இன்னும் முடியலையா?” என்று கேட்டேன். வழக்கமான சிரிப்புடன் தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னடா மெசெஜ் பண்றே?. ஒரு கவிதை எதாவது அனுப்பக் கூடாதா?”

“நீங்க ஒரு கவிதை சொல்லுங்க அடிச்சி அனுப்புறேன்.”

ம்.. கொஞ்சம் யோசித்தேன். நட்பு குறித்து கவிஞர் அறிவுமதி எழுதிய கவிதை வரிகள் ஒன்று எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘அடிவானத்தின் அழகு என்பது இரு சின்னஞ்சிறிய இதயங்களின் நட்பில் தான் உள்ளது’. இந்த வரிகளை முத்துவிடம் சொன்னேன். ஜெட் வேகத்தில் அதை ஆங்கிலத்திலேயே டைப் செய்து அனுப்பினான். பதிலுக்காக இருவரும் காத்திருந்தோம். ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்து பதில் வந்தது. ‘ஏய் லு£சு என்னடா இது உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா.’

“என்னன்ணே பதில் இப்படி வந்திருக்கிறது!” என்று கோபம் கலந்த ஆச்சர்யத்துடன் கேள்வி கேட்டான் முத்து.

“இது கவிதை என்று டைப் செய்து அனுப்பு”- என்றேன். அப்படியே செய்தான். உடனே பதில் வந்தது. ‘ஒண்ணுமே புரியலடா’- என்று அதில் இருந்தது. முத்து ஒரு விதமாக என்னை பார்த்து முறைத்தான்.
நானும் இனிமேல் இந்த மெசெஜ் விஷயத்தில் நாம் தலையிடக் கூடாது என்று நினைத்து சீட்டில் சாய்ந்து து£ங்கத் தொடங்கினேன்.

விடியற்காலை ஈரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் முன்பாக வண்டி நின்றது. ஏதோ லக்கேஜ் இறக்கத் தொடங்கினார்கள். சிலர் வண்டியில் இருந்து இறங்கினர். நாங்களும் இறங்கினோம். நாங்கள் டீ கடை நோக்கி சென்றோம்.

“அண்ணே.. நீங்க ராத்திரி நல்லா து£ங்கிட்டீங்க. நான் தான் து£ங்கல”.

“ஏன் முத்து து£ங்க வேண்டியது தானே?”.

“எங்கண்ணே து£க்கம் வந்துச்சி..!”.

“ஏன்?”

“எங்கண்ணே து£ங்க விட்டாங்க.. எதிர் சீட்டில இருந்த பார்ட்டிங்க பண்ண லு£ட்டி இருக்கே...!”

“என்ன பண்ணாங்க?”.

“எல்லமே பண்ணாங்கண்ணே. ஆ... ஊ..ன்னு சத்தம் வேற கேட்டுக்கிட்டு இருந்துச்சி”.

“நெஜமாவா சொல்ற?”

“சத்தியமான்னே”.

முத்து சொன்னதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அப்போது பஸ் டிரைவர் விசில் அடிக்கும் சப்தம் கேட்டது. உடனே பஸ்சுக்குள் ஏறினோம். எங்கள் இருக்கைக்கு செல்லும் முன்பாக முன்சீட்டை பார்த்தேன். ஒரு போர்வைக்குள் இருவர். முழுவதுமாக போர்த்திக் கொண்டு பிண்ணிப்பிணைந்து இருந்தனர். முத்து சொன்னது உண்மை தான். சீட்டுக்குச் சென்று உட்கார்ந்தேன். இருப்பு பிடிபடவில்லை. ராத்திரி எல்லாமே நடந்திருக்குமா. முத்து பார்த்திருப்பானா என்றெல்லாம் யோசித்து விட்டு து£ங்கி போனேன். ஒரு சில நிமிடங்களில் நாங்கள் இறங்க வேண்டிய அவினாசி நிறுத்தம் வந்தது. இரண்டு பேரும் இறங்கி திருப்பூர் செல்ல டவுன் பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.
ராத்திரி பயணத்தை நினைத்துப் பார்த்தேன். இரண்டு ஜோடிகள் இரவு நடந்து கொண்ட விதம், முத்து இரவு முழுவதும் து£ங்காமல் அதை பார்த்துக் கொண்டிருந்தது போன்றவை நினைவிற்கு வந்தன. அப்போது தான் அந்த செல்போனில் மெசேஜ் கொடுத்த பெண் பற்றி யோசித்தேன். முத்துவிடம் கேட்டேன்.

“அப்புறம்... மெசேஜ் அனுப்புனுயே பதில் ஏதும் வரலியா?”

“எந்த மெசேஜ்?”

“அதாம்பா கவிதை டைப் செஞ்சு அனுப்பினியோ, அந்த பெண் வேற எதாவது மெசேஜ் அனுப்பினாளா?”

முத்து சிறிது தயங்கினான். கொஞ்சம் சிரித்துக் கொண்டே என்னை கேலியாக பார்த்தான்.

“அண்ணே நான் ராத்திரி மூணு பொண்ணுங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன். நீங்க எந்த பொண்ண கேட்குறீங்க?”

முத்து இப்படி சொன்னதை கேட்ட எனக்கு து£க்கி வாரிப்போட்டது. அடப்பாவி ஒரே நேரத்திலேயே மூன்று பெண்களுக்கு மெசேஜ் அனுப்புறானே படுபாவிப்பய.. என்று நினைத்துக் கொண்டேன். தகவல்தொடர்பு உச்சநிலையை அடைய செல்போன்களும் காரணம். செல்போன் என்பது முதன்முதலில் என் கைக்கு கிடைத்த போது நான் வேலையில் இருந்தேன். நாலு நண்பர்களிடம் மட்டுமே அதில் பேசுவேன். நான் படிக்கிற காலத்தில் செல்போன் என்றே ஒன்று இல்லை. அப்போது செல்போன் இருந்திருந்தால் எத்தனை பெண்களின் இதயங்களை நான் செல்போனில் சுழற்றி இருக்கலாம். முத்துவைப் போன்று மூன்று பெண்களுக்கு மட்டுமா ஒரே நேரத்தில் மெசேஜ் செய்திருப்பேன். முப்பது பெண்களுக்கு அல்லவா (!) செய்திருப்பேன். முத்துவை மிஞ்சியிருப்பேன். கவிதை சொல்லியிருப்பேன். இலக்கியம் பேசி இருப்பேன். பெண்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருப்பேன். விளக்கம் அளித்திருப்பேன். விளங்கியிருப்பேன்.
திருப்பூர் பஸ் நிலையம் வந்து விட்டது. கடந்து போன கனங்கள் திரும்ப வருவதில்லை. கணத்த இதயத்துடன் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கினேன்.