Thursday 25 September 2008

மும்தாஜ்-நமீதா பிரமாண்டமும், சாரு நிவேதிதாவின் உயரமும்

தான் உயரமாக இல்லை என்பது சாருவுக்கு எப்போதும் ஒரு குறைபாடாக தான் தெரிகிறது போலும். சாரு, தன்னை விட உயரமான அல்லது பருமனானவர்களைப் பார்த்தால் 'ஆளப் பார்த்தா மல மாதிரியிருக்கான்'னு செல்லுவார். இப்படியாகத் தான் நமீதாவைப் பார்க்கச் சென்ற சாருவுக்கு ஒரு மலைப்பு ஏற்பட்டிருக்கிறது. ,,,சந்திப்பின் போது ஒரு முக்கியமான தர்ம சங்கடம் என்னவென்றால், அவர் ஆறு அடிக்கு மேல் உயரமாக இருந்தார். நானோ ஐந்தடி ஐந்து அங்குலம். எனவே நான் பேசும் போது அவருடைய அந்த பிரும்மாண்டமான பிரதேசத்தை நோக்கித்தான் பேச வேண்டி வந்தது. இல்லாவிட்டால் தலையை அண்ணாந்து பார்த்துப் பேசுவது ரொம்பவும் செயற்கையாகத் தோன்றும். அவருக்கோ சங்க இலக்கியத்தில் வர்ணித்திருப்பது போல் இருந்ததால் என் முகத்தில் இடித்து விடுமோ என்ற பயத்தில் சற்று distance- இலேயே நிற்க வேண்டியிருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக உயரமாகப் பிறக்காததன் கஷ்டத்தை அனுபவித்தேன்.
இப்படி தான் தன்னுடைய அனுபவத்தையும், ஆதங்கத்தையும் எழுதியுள்ளார் சாரு. ஆனால் நமீதாவின் பிருமாண்டத்தை அவர் 2008ல் கண்டு மலைத்தாலும், 2002ல் மும்தாஜின் பிருமாண்டத்தையும் கண்டு மலைத்திருக்கிறார். ஆனால் அப்போதும் தான் உயரமாக இல்லை என்ற கவலை அவரிடத்தில் நிறையவே இருந்திருக்கிறது. 2002ல் அதைப்பற்றி எழூதியது இன்று அலைந்து திரிபவனின் அழகியல் புத்தகத்தில் 41ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அதை இப்போது நான் பதிவு செய்தால் பொறுத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் சாரு எழுதியுள்ளதாவது, ஓ போடு (ஜெமினி படம் பார்த்தேன். 65 ரூபாய் டிக்கெட். ஆனால் இருக்கைகளோ எல்.கே.ஜி. குழந்தைகள் மட்டுமே உட்காரக் கூடிய அளவுக்கு அவ்வளவு சிறிசு. என் எதிரே அமர்ந்திருந்த நபர் ஆறரை அடி உயரம். அதற்கேற்ற பருமன். சற்று கீழே குனிந்து உட்காரச் சொன்னேன். அவ்வளவு சிறிய இருக்கையில் அவரால் ஒரு இஞ்ச் கூட உடலை நகர்த்த முடியவில்லை. 150 ரூபாய் என்று ஒரு டிக்கட் வைத்து இருக்கைகளைச் சற்று பெரிதாக்கலாம். 'ஓ...போடு' மாதிரியான கீதங்கள் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் வரக்கூடும். முன்பு நான் சிறுவனாக இருக்கும் போது 'மாமா மாமா மாமா... ஏம்மா ஏம்மா ஏம்மா' என்ற பாடல்(படம்; குமுதம்) ஞாபகம் வருகிறது. எம்.ஆர்.ராதா டான்ஸ். கலக்கியிருப்பார். 'ஓ போடு'வில் எனக்கு ஒரே ஒரு ஏமாற்றம். தோழி மும்தாஜைக் காணோம். அவர் ஆடியிருக்க வேண்டிய பாடல். என்ன இருந்தாலும் 'மலே மலே'வுக்கு 'ஓ போடு' ஈடாகாது. இது தான் சாரு 2002ல் எழுதியது. அன்று மும்தாஜ், இன்று நமீதா என பிரமாண்டம் எங்கிருந்தாலும் ஆதங்கப்படக்கூடியவர் தான் சாரு. இனி அடுத்த வருடம் புதிய பிரமாண்டம் அறிமுகமானாலும் ஏக்கப்படக்கூடியவர் தான் சாரு. தன்னை விட உயரமான அல்லது பருமனான எல்லாம் சாருவைப் பொறுத்தவரை பிருமாண்டம் தான். ஆனால் அவர் தன்னுடைய பதிவில் தான் ஐந்தடி ஐந்து அங்குலம் உயரம் என்று தவறாக கூறியிருக்கிறார். சாரு உங்கள் உண்மையான உயரத்தை சொல்லாதது ஏன் என்று எனக்கு புரியவில்லை.

No comments: