Saturday 15 March 2008

புதுச்சேரியில் கூடுதல் பொறுப்பு; கவர்னர் போபிந்தர் சிங் இன்று பதவி ஏற்றார்

புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வந்த முகுத்மிதி தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக தனது பதவியினை கடந்த 12-ந்தேதி ராஜினாமா செய்தார். அவர் அருணாசலபிரதேசத்திலிருந்து டெல்லி மேல்சபைக்கு போட்டியிடுகிறார். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் கவர்னர் பொறுப்பினை அந்தமான் கவர்னரான போபிந்தர்சிங் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் அறிவித்தார். கூடுதல் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டிருக்கும் போபிந்தர் சிங் இன்று காலை புதுச்சேரிக்கு வந்தார். கவர்னர் மாளிகையில் 12.15 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் புதிய கவர்னருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதுச்சேரி சட்டசபை விரைவில் கூட உள்ள நிலையில் நிரந்தரமாக புதிய கவர்னர் நியமிக்கப்படாவிட்டால் கவர்னர் உரையை போபிந்தர் சிங் வாசிப்பார்.

No comments: