Wednesday 12 March 2008

புதுச்சேரி ஆளுநர் முகுத்மிதி திடீர் ராஜினாமா

பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காது என்பார்கள். அதைப் போல் தான் புதுச்சேரி மாநில ஆளுநர் முகுத்மிதியும். பொது வாழ்வில் மிஸ்டர் கிளின் என்ற பட்டம் பெற்ற இவர் அருணச்சல பிரதேசத்தில் 1954ல் பிறந்தவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் தொண்டாற்றியவர். 1983 முதல் 2006 வரை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர். 1999 முதல் 2003 வரை அருணாச்சல பிரதேச முதல்வராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் பெருமைக்குறிய கோஷ்டிபூசல், அருணாச்சல பிரதேசத்திற்கு மட்டும் விதிவிலக்கா என்ன. இதன் காரணமாக இளம் வயதிலேயே புதுச்சேரிக்கு கவர்னராக்கப்பட்டார். ஏறத்தாழ 20 மாதங்கள் கவர்னர் பதவி வகித்த முகுத்மிதியை சொந்த மாநில அரசியல் இழூத்தது. இதற்காக கடந்த 3 மாதங்களாக டெல்லிக்கு அடிக்கடி சென்று வந்த முகுத்மிதிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி அளிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மதியம் 3 மணிக்கு அவர் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கவர்னர் மாளிகையில் தேங்கி கிடக்கும் எண்ணற்ற கோப்புகள் விடுதலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளன. முகுத்மிதி இன்று மாலையுடன் விடைபெற்றார்.

No comments: