Tuesday 17 March 2009

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்த கடலு£ர் வாலிபர் ஆனந்த் புதுச்சேரி மருத்துவமனையில் உயிரிழந்தார்

கடலூர் அருகே உள்ள அன்னவள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகன் ஆனந்த் (வயது 23). விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர். கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் இலங்கை தமிழர்களுக்காக நேற்று முன்தினம் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் உடனே சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பாட்டளிமக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, விடுதலைசிறுத்தை கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பேராசிரியர் ராமதாஸ் எம்.பி, கடலூர் தொகுதி எம்.எல்.ஏ அய்யப்பன், காட்டு மன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. ரவிக்குமார், கடலூர் நகரசபை துணைத்தலைவர் தாமரைச்செல்வன், பெரியார் திராவிடர் கழக லோகு. அய்யப்பன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன் ஆகியோர் தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த ஆனந்தை பார்த்து ஆறுதல் கூறினர். இந்நிலையில் ஆனந்த் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமால் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அவரது உடலுக்கு பழ.நெடுமாறன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்தினர். அன்னாரது உடல் கடலு£ருக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆனந்தனின் உடலைப்பார்த்து அவரது தங்கை ஆனந்தி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்ததது.

No comments: