Thursday 28 February 2008

அற்புதமான நினைவலைகள் அடங்கிய தொகுப்பு

தமிழ் எழுத்துலகில் அறிவியல் அதிர்வை ஏற்படுத்திய திருமிகு. சுஜாதா அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. 1990 ஜூலையில் விகடன் மாணவ நிருபர்கள் பயிற்சி முகாமில் சுஜாதா அவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. கணனிகள் வெகு பிரபலமாகாத காலமது.அந்த நடமாடும் கணனியை பார்த்து,பேசி,பிரமித்து போனேன்.
எந்தவித கடினமான அறிவியல் விஷயத்தையும் புரியும்படி நகைச்சுவையோடு சொல்லும் பாணியை அறிமுக படுத்தியவரின்,‘18 சிறுகதைகள்’ தொகுப்பை சில ஆண்டுகளு’கு முன்பு குங்குமத்தின் தற்போதைய முதன்மை ஆசிரியர் முருகன் என்னிடம் கொடுத்தார். அதில் முதல் கதை... ஒரு தாய் தனது குழந்தையுடன் மருத்துவமனை’கு வருவார்.நகர விஷயங்கள் புரிபடாமல் குழந்தை’கு மருத்துவம் பார்க்காமலேயே கிராமத்து சாமியின் விபூதி சரி செய்துவிடும் என்ற நம்பிக்கையில் திரும்பிவிடுவார். என்றைக்காவது குறும்படம் எடுக்க நேர்ந்தால் இதைத்தான் முதலில் எடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.....சுஜாதா அவர்களின் ஆன்மா தான் இனி அதற்கு அனுமதியளிக்க வேண்டும்.
..........துயருடன்
தருமராஜன்,தினகரன்,புதுச்சேரி

No comments: